Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலை திறப்பிற்கு செல்லாதது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (14:42 IST)
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு செல்லாதது குறித்து கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி, பினராயி விஜயன் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.  இதில் ரஜினி, கமல் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது.
 
நேற்று மாலை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் திட்டவட்டமாக மறுத்து வதந்திகளை நம்பவ வேண்டாம் என முற்றுப்புள்ளி வைத்தார் கமல்ஹாசன். இதையடுத்து கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், சிலை திறப்பு விழாவிற்கு செல்லாததற்கு எந்த ஒரு பகையும் இல்லை. இன்று கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்கிறேன். அதனால் தான் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை.
 
கருணாநிதி மீது எனக்கு அளவுக்கடந்த மரியாதை இருக்கிறது. அதனை யாரிடமும் நிரூபிக்க வேண்டியது இல்லை என கமல்ஹாசன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments