Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth Karthick
ஞாயிறு, 25 மே 2025 (15:40 IST)

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் நாளையும் ரெட் அலெர்ட் மற்றும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர மாநிலங்களிலும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில் காலை முதலே மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர தேனி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போர்க்குணம் இல்லை! - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து!

பாகிஸ்தான் யூடியூபருடன் நெருக்கம்.. ஜோதி மல்ஹோத்ரா குறித்த திடுக் தகவல்..!

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments