Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெக்வஸ்டை ஏற்காததால் ஆத்திரம்! – மாணவியை ஆபாசமாக சித்தரித்த உறவினர் கைது!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (12:16 IST)
இன்ஸ்டாகிராமில் ப்ரெண்ட் ரெக்வெஸ்டை ஏற்காததால் மாணவியை ஆபாசமாக சித்தரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த 17 வயது பெண் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் Fashion Designing படித்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் உபயோகித்து வரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமான நபர் ஒருவர் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து தனது டைம்லைனில் பதிவேற்றியுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் அளித்த புகாரின்பேரில் அந்த நபரின் ஐபி அட்ரெஸை கண்டறிந்து போலீஸார் சேலத்தை சேர்ந்த பரசுராமன் என்பவரை கைது செய்தனர்.

மாணவியின் உறவினரான பரசுராமன் தனது சொந்த ஐடியிலிருந்து மாணவிக்கு ரெக்வெஸ்ட் செய்துள்ளார். ஆனால் அதை மாணவி ஏற்காத நிலையில் போலி ஐடி தயார் செய்து மாணவிக்கு ரெக்வெஸ்ட் கொடுத்து இவ்வாறான மார்பிங் வேலைகளை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து மொபைலை பறிமுதல் செய்த காவல்த்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments