Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்- முதல்வர் முக ஸ்டாலின்

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (23:49 IST)
நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம்  மோகனூர் வட்டம் மேட்டுத்தெரு பகுதியில் இன்று அதிகாலை வேளையில், அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதில், தில்லைக்குமார், பிரியா, செல்வி, பெரிக்காள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு  முதல்வர் முக. ஸ்டாலின்  இரங்கல் மற்றும் ஆறுதல் கூறியதுடன், இவ்விபத்தில்  உயிரிழந்தவருக்கு தலா 2 லட்சம்  காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை தாக்கினால் இந்திய வடகிழக்கு மாநிலங்களை தாக்குவோம்: வங்கதேச முன்னாள் ராணுவ அதிகாரி

இந்தியா கூட்டணி தலைவர்களின் தூக்கம் கெட்டுவிட்டது.. பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு..!

1000 பள்ளிகளை மூட உத்தரவு.. உணவு பொருட்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான்

பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உண்மைதான்: பெனாசிர் புட்டோ மகன்

போர் விமானங்களை சாலையில் இறக்கி பயிற்சி பெறும் இந்திய ராணுவம்.. நடுக்கத்தில் பாகிஸ்தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments