Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (17:37 IST)
கரூரில் 30 வது சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.



கரூரில் 30 வது சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.கரூர் அடுத்த வெண்ணமலை, அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற, 30 வது சாலை பாதுகாப்பு வாரவிழாவினையொட்டி 4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், கரூர் டி.எஸ்.பி கும்மராஜா தலைமை வகித்தார். கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அலுவலர் சுப்பிரமணி., முன்னிலை வகித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிவது குறித்தும், இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்த்தப்பட்டது. மேலும், இந்த கருத்தரங்கில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
 
சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments