Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமுதம் பல்பொருள் அங்காடியில் கொள்முதல் விலையில் தக்காளி, பருப்பு விற்பனை!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (20:37 IST)
சமீபத்தில் தக்காளி  விலை உயர்ந்தது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலையேற்றத்தைக் குறைக்க  அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று   எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும்  கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக அரசு இந்த விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு இன்று முக்கிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகளில் நாளை முதல் கொள்முதல் விலையில் பருப்பு, தக்காளி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யவுள்ளது.

இதற்காக தமிழக உணவுத்துறை,  சென்னையில் உள்ள 14 பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதல் நியாய விலைக்கடைகளில் நாளை முதல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பும், மற்றும் தக்காளி கொள்முதல் விலைக்கு விற்பனை செய்ய  ஏற்பாடு செய்துள்ளது. அதில், தக்காளி 1 கிலோ ரூ.60கும் துவரம் பருப்பு 500கிராம் ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு 500கிராம் ரூ60க்கும் விற்பனை செய்ய உணவுத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments