Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிதி கொடுத்த சேலம் சிறுவனுக்கு டேப் உறுதியா?

Webdunia
திங்கள், 17 மே 2021 (19:57 IST)
கொரோனா நிதி கொடுத்த சேலம் சிறுவனுக்கு டேப் உறுதியா?
சேலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் டேப் வாங்குவதற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை தற்போது கொரோனா நிதியாக கொடுத்துள்ளதால் தமிழக முதல்வர் அந்த சிறுவனுக்கு டேப் வாங்கித் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
கொரோனா நிதியாக பொதுமக்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வரும் நிலையில் சிறுவர் சிறுமிகளும் தாங்கள் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்து வருகின்றனர் 
 
மதுரையைச் சேர்ந்த சிறுவன் சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்ததை அடுத்து அந்த சிறுவனுக்கு தமிழக முதல்வர் சைக்கிள் வாங்கி கொடுத்தார். இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் ஆன்லைன் பாடம் படிக்க கடந்த ஒரு ஆண்டாக உண்டியல் சேமித்து வைத்திருந்தார். அதில் மொத்தம் 2 ஆயிரத்து 60 ரூபாய் இருந்த நிலையில் அந்த பணத்தை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதியாக ஒப்படைத்துள்ளனர் 
 
இதுகுறித்த தகவல் தெரிந்ததும் தமிழக முதல்வர் அந்த சிறுவனுக்கு டேப் வாங்கிக் கொடுப்பார் என்று நெட்டிசன்கள் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்: வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments