Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Mahendran
செவ்வாய், 25 ஜூன் 2024 (11:44 IST)
சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்த நிலையில் அந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட போது சனாதனம் தர்மம் என்பது டெங்கு மாதிரி அதை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்
 
அவரது பேச்சு சர்ச்சைக்குரிய வகையாக இருப்பதாக அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணை நடந்த நிலையில் பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.
 
இதனை அடுத்து அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.  மேலும்  உச்சநீதிமன்றத்தில் இதே வழக்கு நிலுவையில் இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த வழக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார் 
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments