Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை சந்தித்த சுப்பிரமணியன்: முதல்வர் ஆயிடுவிங்க என உறுதி!

சசிகலாவை சந்தித்த சுப்பிரமணியன்: முதல்வர் ஆயிடுவிங்க என உறுதி!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (12:45 IST)
தனது கணவர் நடராஜன் உடல் நிலை சரியில்லாததை காரணம் காட்டி சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா 5 நாட்கள் அவசர பரோலில் வந்துள்ளார். தி நகர் கிருஷ்ண பிரியாவின் வீட்டில் இருக்கும் சசிகலா தினமும் குளோபல் மருத்துவமனையில் உள்ள அவரது கணவரை பார்த்து வருகிறார்.


 
 
பரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு வீட்டை தவிர கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள குளோபல் மருத்துவமனைக்கு செல்ல மட்டுமே அனுமதியுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் சசிகலாவை பார்க்க கூட்டம் அலை மோதுகிறது.
 
நேற்று குளோபல் மருத்துவமனைக்கு வந்த சசிகலாவை சுப்பிரமணியன் என்ற முதியவர் அவரது காருக்கு மிக நெருக்கமாக சென்று சசிகலாவிடம் பேசினார். அப்போது பேசிய அவர் நீங்க முதல்வர் ஆயிடுவீங்க என கூறியுள்ளார். அதற்கு சசிகலாவும் புன்னகைத்தவாறு பிரேயர் பண்ணுங்க என கூறியுள்ளார்.
 
வங்கி ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள சுப்பிரமணியன் சென்னை ராயப்பேட்டை வி.எம். தெருவில் வசித்து வருகிறார். இவர் 1981-இல் நடராஜன், சசிகலா தம்பதியினருக்கு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸில் 400 ரூபாய் வாடகையில் வீடு வாடகைக்கு கொடுத்திருக்கிறார். மேலும் சசிகலா கேசட் கடை நடத்துவதற்கு வங்கி கடன் கிடைக்க இவர் உதவியதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

தமிழக மீனவர்கள் கைது.! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்துள்ளர்.

தமிழக முழுவதும் பத்து லட்சம் பண விதைகள் விதைக்கப்பட உள்ளது -அமைச்சர் கே.என்.நேரு!

இலங்கை அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திசாநாயக்க..! பிரதமர் மோடி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments