Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்குவிப்பு வழக்கை திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்: சசிகலா புதிய மனு!

சொத்துக்குவிப்பு வழக்கை திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்: சசிகலா புதிய மனு!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (11:25 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தரப்பில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க இன்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 
 
சசிகலா சார்பில் ஏற்கனவே சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அந்த மனு மீதான விசாரணை இன்று வர உள்ளது. இந்நிலையில் சசிகலா சார்பில் இன்று புதிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் சொத்துக்குவிப்பு வழக்கை திறந்தவெளி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்க சசிகலா கோரிக்கை வைத்துள்ளார்.
 
ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கை 18 ஆண்டுகளுக்கு இழுத்தடித்த சசிகலா தரப்பு மீண்டும் விசாரிக்க கோரிக்கை வைத்திருப்பது தள்ளுபடியாக வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கில் அனைத்து மேல்முறையீடும் முடிந்துவிட்டதால் சசிகலா தரப்பு மீண்டும் திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments