Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. மர்ம மரணம்: சசிகலா வைத்த செக்; விசாரணை வலையத்தில் ஸ்டாலின்?

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (17:52 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 
 
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தில் முன்னாள் செயலாளர், உயர் காவல் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள், அதிமுகவை சேர்ந்தவர்கள், சசிகலா உறவினர்கள் என அனைவரிடமும் விசாரணை நடைபெற்றது. 
 
சிறையில் உள்ள சசிகலா தனது வாக்குமூலத்தை தனது வழக்கறிஞர் மூலம் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தார். தற்போது இந்த ஆணையம் ஒ.பன்னீர் செல்வத்தை விசாரணை செய்து அதோடு விசாரணைகளை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 
ஆனால், ஆணையத்தின் இந்த முடிவிற்கு சசிகலா தரப்பு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறிய மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டிருப்பது இந்த வழக்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments