Publish Date: Mon, 18 Jul 2022 (14:23 IST)
Updated Date: Mon, 18 Jul 2022 (14:28 IST)
கள்ளகுறிச்சி சக்தி மேல் நிலைப்பள்ளியில் த ற்போது பயின்று வரும் மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க நவடடிக்கை எடுக்கப்படும் என அமைச்சசர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கணியாமூரில் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி நே ற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, நடந்த போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி சூ றையாடப்பட்டது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உ ள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகள் இன்று இயங்காது என அறிவித்தன.
இந்த நிலையில்,, பள்ளிகள் இனனும் வழக்கம் போல் இயங்கும் எனப் பள்ளிக் கல்வித்ததுறை அறிவித்துள்ளது.
மேலும், சின்ன சேலம் வன்மு றை சம்பவம் தொடர்பாக தன்னிச்சையாம விடுமுறை அறிவித்துள்ள பள்ளிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.