Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி வாகனம் விபத்து...ஓட்டுநர் உள்ளிட்ட மாணவர்கள் விபத்து !

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (22:43 IST)
திருவண்ணாமலை மாவட்டம்  வந்தவாசி அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்ததில்  ஓட்டுநர் உள்ளிட்ட 9 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகேயுள்ள ஒரு கிராமத்தில்  மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பள்ளி வாகனமானது தென்கினலூர் என்ற கிராமத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த ஒரு வாகனத்திற்கு வழிவிட ஓரமாக ஒதுங்கியது. இதில் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விபத்திற்குள்ளானது.  

இதில், 9 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் விபத்தில் சிக்கினர். அருகே இருந்த மக்கள் மாணவர்களையும் ஓட்டுநரையும் மீட்டு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: தவெக முக்கிய அறிவிப்பு..!

நாளை போர் பாதுகாப்பு ஒத்திகை.. என்னென்ன நடக்கும்?

நேரில் ஆஜராகாவிட்டால்?... அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை.

நாளை நாடு முழுவதும் போர் ஒத்திகை.. தமிழகத்தில் எங்கே? தலைமை செயலகத்தில் ஆலோசனை..!

2 அணைகள் முழுவதும் மூடல்! பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தியது இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments