Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்து போட்ட பிச்சையில் வளர்ந்தவர் ரஜினி - சீமான் காட்டம்

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (16:59 IST)
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவிற்கு ஆதவாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என நம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்.

 
ஆண்டாள் குறித்து தனது கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தொடர் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. 
 
குறிப்பாக வைரமுத்துவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். வைரமுத்துவை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் எச்.ராஜா. இந்நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் பாரதிராஜா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எச்.ராஜாவை சரமாரியாக விமர்சித்து இருந்தார். பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ எனவும், எச்.ராஜாவால் இந்தியா துண்டாடப் படுமோ என்றும் அச்சம் தெரிவித்தார்.
 
இந்நிலையில், இன்று ஒரு படவிழாவில் கலந்து கொண்டு பேசிய பாரதிராஜா “வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்தில் கொல்லைப்புறமாக வர நினைத்தால் நிறைவேறாது. எங்களை குற்றம்பரம்பரை ஆக்கி விடாதீர்கள். எங்களுக்கு மதம் என்பது ஒருபோதும் கிடையாது” என பகீரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
அதே படவிழாவில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது “வைரமுத்து ரஜினிகாந்தை நண்பராக பார்க்கிறார். ரஜினி அவரை எப்படி பார்க்கிறார் என்பது தற்போது நமக்கு தெரிகிறது. ஆண்டாள் பிரச்சனையில் இதுவரை ரஜினிகாந்த் வாய் திறந்து பேசவில்லை. 
 
ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா. உப்பிட்ட தமிழ் மண்னை நான் மறக்க மாட்டேன் என  வைரமுத்து எழுதிய வரிகளின் மூலமாகவே ரஜினி வளர்ந்தார். அது வைரமுத்து அவருக்கு போட்ட பிச்சை.
 
வைரமுத்துவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளை இழக்க நேரிடும் என ரஜினி பயப்படுகிறார். அப்படி இருக்கக் கூடாது. தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டும்.” என சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி இன்ஸ்டாகிராம் தான் அரசியல்.. தவெக, சிஜேபிய பார்த்து கற்று கொள்ளும் அரசியல்வாதிகள்...

நேபாளம் பேரழிவு எதிரொலி.. சீனா கட்டிவரும் அணையால் இந்தியாவுக்கு ஆபத்தா?

29 வயதில் ரிட்டயர்டு ஆன இளம்பெண்.. என்னால் இனிமேல் கார்ப்பரேட்டில் வேலை செய்ய முடியாது...

வெயிட் பண்ணுங்க ப்ரோ.. ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த பாஜக எம்பி கங்கனா ரனாவத்

அத்திப்பட்டி போல பல கிராமங்களை காணவில்லை.. நேபாளத்தில் வரலாறு காணாத இயற்கை பேரழிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments