Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 ஆம் தேதி கண்டன நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் - சீமான் அறிவிப்பு

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (15:02 IST)
திமுக அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகிற 14 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது என சீமான் அறிவிப்பு. 

 
முல்லை பெரியார் அணை வலுவற்று இருப்பதாகவும் அதனால் அதன் கொள்ளளவை குறைக்க வேண்டுமென்றும் நீண்ட நாட்களாக வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென்ற கேரள அரசின் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிந்து, உச்சநீதிமன்றம் நிர்ணயித்த குறைந்தபட்ச நீர்மட்டமான 139.5 அடியை எட்டுவதற்கு முன்பாகவே, அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோதே, அத்துமீறி நுழைந்து அணையைத் திறந்த கேரள அமைச்சர்களின் அடாவடிச் செயலில் ஈடுபட்டுள்ளது.
 
இதனை தடுக்கத்தவறிய திமுக அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகிற 14 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில், தேனி பங்களாமேடு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்று நமது எதிர்ப்பின் வலிமையை அரசிற்கு உணர்த்திட வேண்டுமாய் அறிவுறுத்துகிறேன் என கோரியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடவுள் ராமர் என்பது ஒரு கற்பனை கதை.. சர்ச்சை கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது வழக்கு..!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. 4 கட்டங்களாக யாத்திரை நடத்தி கொண்டாட்டம்: நயினார் நாகேந்திரன்

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments