Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலு மேடை ஏறினால் போதும்.. திமுக ஊத்திக்கும்.. செல்லூர் ராஜு பேச்சு..!

Siva
ஞாயிறு, 2 மார்ச் 2025 (12:50 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மதுரை அருகே உள்ள புதூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:

"கலைஞர் உயிரோடு இருந்தபோது, 2006 ஆம் ஆண்டு, திமுகவுக்காக வைகைப்புயல் வடிவேலு குரல் கொடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால், அப்போது திமுக வெற்றி பெறவில்லை.

ஒருபுறம் வடிவேலு, மறுபுறம் குஷ்பு என தீவிரமாக பிரச்சாரம் செய்த நிலையில், திமுக தோல்வியை அந்த தேர்தலில் சந்தித்தது. தற்போது மீண்டும் நடிகர் வடிவேலு திமுகவுக்காக மேடையேறி இருக்கிறார். குஷ்பு பாஜகவுக்காக மேடையேறுகிறார். எனவே, அந்த கட்சிகள் கண்டிப்பாக 'ஊத்திக்கும்'. இது நூற்றுக்கு நூறு உண்மை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"ஸ்டாலின் தான் வர்றாரு.. விடியல் தர போறாரு’ என்ற பாடலை தேர்தலின்போது போட்டார்கள். ஆனால், இன்று முதலமைச்சரின் பிறந்த நாளில் கூட அந்த பாடலை போடவில்லை. ஏனென்றால், மக்கள் அனைவரும் கொதித்து போயிருக்கின்றனர். அனைத்து விதமான கட்டணங்களும் உயர்ந்து விட்டன. மக்கள் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்று அவர் பேசினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments