Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆரும், ஜெ.வும் பெற்றோர்கள் ; மோடி நண்பர் மட்டுமே : செல்லூர் ராஜூ செண்டிமெண்ட்

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (13:45 IST)
அதிமுகவை பொறுத்தவரை பிரதமர் மோடி நண்பர் மட்டும்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 
சமீபத்தில் அதிமுக விழா ஒன்றில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ் “ பிரதமர் மோடி கூறியதால்தான் இரு அணிகளையும் இணைத்தேன். கட்சியை காப்பாற்ற அணிகள் இணைப்பு அவசியம் என மோடி கூறினார். எனக்கு கட்சி பதவி மட்டும் போதும். அமைச்சர் பதவி வேண்டாம் என மோடியிடம் கூறினேன். ஜெ. எல்லாவற்றையும் எனக்கு கொடுத்து விட்டார். எனக்கு பதவி ஆசை கிடையாது” என அவர் பேசியுள்ளார். 
 
பாஜகவின் ஆதரவு மற்றும் பின்னணியிலேயே தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்கிற கருத்து நிலவி வரும் வேளையில், அதை உறுதி செய்யும் விதமாக ஓ.பி.எஸ் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்த போது, சட்டசபையில் ஜெ.வின் படத்திறப்பு விழாவிற்கு ஏன் பிரதமர் மோடியை அழைக்கவில்லை?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ “அதிமுக பொறுத்தவரை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எங்களுக்கு தந்தையும், தாயும் போன்றவர்கள். பிரதமர் மோடி எங்களுகு நண்பர் மட்டுமே” எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்: முக்கிய அறிவிப்பு..!

பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம்: மம்தா பானர்ஜி எடுத்த முக்கிய முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments