Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி பெற்றதும் திமுகவில் இணைந்த கவுன்சிலர்கள்! – சிவகங்கையில் பரபரப்பு!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (11:10 IST)
சிவகங்கையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிற கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்று வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்ட 7 வாக்கு சாவடிகளில் அடுத்த நாள் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பின் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் சிலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். சிவகங்கை நகராட்சி 22வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சரவணன். இவர் தற்போது அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். மேலும் வார்டு 4 மற்றும் 19ல் வென்ற சுயேட்சை வேட்பாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர்.

நேற்று இரண்டு அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்த நிலையில் இன்றும் ஒருவர் திமுகவில் இணைந்துள்ளது அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாகூர் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு! வான்வெளியை மொத்தமாக மூடிய பாகிஸ்தான்!

+2 தேர்வில் Fail ஆனவர்களுக்கு மறுதேர்வு எப்போது? - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சிறப்பாக நடந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.. பக்தர்கள் கூட்டம் அலைமோதல்..!

பிளஸ் 2 தேர்வில் 100க்கு 100.. எந்தெந்த பாடத்தில் எத்தனை மாணவர்கள்?

வெளியானது ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்! அரியலூர் முதலிடம் பிடித்து சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments