Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள்.. தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

Siva
வெள்ளி, 24 மே 2024 (07:14 IST)
தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதை அடுத்து தமிழகத்தில் கூடுதலாக மருத்துவ மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகள் இருப்பதால் தமிழகத்திலிருந்து அதிக மருத்துவ மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்பதும் இதன் காரணமாகத்தான் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே தமிழகத்தில் சில மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் தற்போது 6 புதிய மருத்துவக் கல்லூரியில் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments