Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்கரையில் மூட்டை மூட்டையாக காலணிகள் கண்டெடுப்பு! – ராமேஸ்வரத்தில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (17:16 IST)
ராமேஸ்வரம் கடற்கரையில் கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக செருப்புகள் பதுக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டிணம், ராமேஸ்வரம் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள், மஞ்சள் உள்ளிட்ட பல பொருட்கள் கடத்தப்படுவதும், அதை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் சேராங்கோட்டை அருகே கடற்கரை மணலில் சில மூட்டைகள் புதைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. காவல்துறையினர், சுங்கத்துறை அதிகாரிகள் சென்று அந்த மூட்டைகளை பறிமுதல் செய்ததில் அதில் காலணிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. 15க்கும் மேற்பட்ட சாக்குப்பைகளில் 250 ஜோடி காலணிகள் இருந்துள்ளது.

இந்த காலணிகளை இலங்கைக்கு கடத்துவதற்காக சிலர் பதுக்கி வைத்திருந்திருப்பது தெரிய வந்துள்ள நிலையில் அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத மோதலை தூண்டுகிறாரா மதுரை ஆதீனம்? - மதுரை கமிஷனரிடம் புகார்!

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல: எடப்பாடி பழனிசாமி

நானாக கூட்டணி மாறவில்லை, எனது கட்சி தான் என்னை மாற வைத்தது: நிதிஷ்குமார்

பிஸினஸ்மேன் போல வந்து ரூ.23 கோடி வைரம் கொள்ளை! சென்னையில் ஒரு சதுரங்க வேட்டை? - என்ன நடந்தது?

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

அடுத்த கட்டுரையில்
Show comments