Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஜோதிகா குறிப்பிட்டுப் பேசிய மருத்துவமனையில் பிடிபட்ட பாம்புகள்…

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (22:43 IST)
நடிகர் சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா, தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை, முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று பேசியது, தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள சூர்யா, தன் மனைவி கூறிய கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் ஆன்மீகப் பெரியோரின் எண்ணங்களைத் தான் ஜோதிகாவும் கூறினார், அவர் கூறிய கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன் என அதில் தெரிவித்திருந்தார். அதில் விவேகானந்தர், திருமூலர் போன்ற மகான்களின் கருத்துகளை மேற்கோள்காடியிருந்தார்.

இந்நிலையில், ஜோதியாக சுட்டிக்காட்டிப் பேசிய தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில், இன்று ஒரு ஊழியரை பாம்பு கடித்துள்ளது.  இதனையடுத்து, அவருக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து அங்கிருந்த 10 க்கும் மேற்பட்ட பாம்புகளை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments