Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்ப்யூட்டர் வெடித்ததில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் பரிதாப பலி

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (08:40 IST)
மதுரையை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் கம்ப்யூட்டர் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அனுமர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரகுனாதன். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர், தனது தந்தை கடந்த வருடம் உயிரிழந்ததையடுத்து, இவர் மேலூரில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தார். 
 
நேற்று ரகுனாதன் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென கம்ப்யூட்டர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் ரகுனாதன் தூக்கி வீசப்பட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டினர் ரகுனாதனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரகுநாதன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments