Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயின் கழுத்தை இறுக்கிக் கொன்று நாடகமாடிய மகன், மகள் கைது!

Mother Murder
Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (15:53 IST)
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்  அருகேயுள்ள பகுதியில் தாயை மகன் மற்றும் மகள் இருவரும் சேர்ந்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வாலையார்வாடி  நாடார் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் செல்வம். இவர், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி ஜெயா952). இத்தம்பதியர்க்கு 2 மகள் 1 மகன் உள்ள நிலையில், மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து கணவருடன் ராமேஸ்வரத்தில் வசிக்கிறார்.

இரண்டாவது மகள் திவ்யா மற்றும் அவரது கணவர் ராஜூ திவ்யாவின் தம்பி வேல்முருகன் ஆகியோர் நாடார் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்த  நிலலையில், சில நாட்களாக தாய் ஜெயாவுக்கும் மகள், மற்றும் மகனுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்ந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதில், ஆத்திரமடைந்த  திவ்யா, வேல்முருகன், இருவரும் ஜெயாவை கீழே தள்ளிவிட்டனர்.

கீழே சரிந்து விழுந்து தலையில் அடிபட்ட ஜெயாவை திய்வாவும், வேல்முருகனும் கழுதிதை இறுக்கி அவரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இக்கொலையை மறைத்து தாய் ஜெயா இயற்கையாக மறைந்ததாக அவர் கூறியுள்ளனர், பின்னர், அச்சத்தால், விஏஓவிடம் தாயைக் கொன்றதை இருவரும் ஒப்புக்கொண்டு சரணடைந்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் இதுபற்றி போலீஸில் புகாரளித்தார்,. அதன்படி, திவ்யா(26), வேல் முருகன்(23( ராஜூ(31)  ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து  போலீஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments