Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: 4089 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

Mahendran
சனி, 7 டிசம்பர் 2024 (16:45 IST)
திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, 4089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளதாகவும், மாலை 4 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மகா தீபத்தை காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 4089 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னை, பெங்களூர், புதுவை உள்ளிட்ட இடங்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இந்த சிறப்பு பேருந்துகளை முன்பதிவு செய்து தங்கள் பயணத்தை திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் உறுதி செய்து கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments