Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: எந்தெந்த நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து?

Siva
சனி, 2 நவம்பர் 2024 (08:55 IST)
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற இருப்பதை முன்னிட்டு, சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு அடுத்த வாரம், திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகிறது, இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில், இந்த ஆண்டும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு நவம்பர் 6ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நவம்பர் 6ஆம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து நேரடியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், நவம்பர் 7ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், பெங்களூரு, ஆர்.கே.நகர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்தப் பேருந்துகளில் திருச்செந்தூருக்கு சென்று வர, www.tnstc.in என்ற இணையதளம் மற்றும்  tnstc official செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments