Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புச்செழியன் உண்மையில் கிடைக்கவில்லையா? ஏமாற்றத்துடன் திரும்பிய தனிப்படை

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (09:58 IST)
சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாகியுள்ள பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெங்களூர், ஐதராபாத் உள்பட பல நகரங்களில் சல்லடை போட்டு அவரை தேடி வந்தனர்.
 
இந்த நிலையில் அன்புச்செழியனை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் நேற்று சென்னை திரும்பினர். அன்புச்செழியன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும், அவர் இடம் மாறிக்கொண்டே இருப்பதால் பிடிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
ஸ்காட்லாந்து போலிசாருக்கு இணையான தமிழக போலீஸ் ஒரு சாதாரண பைனான்சியரை பிடிக்க முடியவில்லை என்று கூறுவதை ஏற்க முடியவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் அன்புச் செழியன் சார்பில் மீண்டும் ஒரு முன் ஜாமின் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments