Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை என்கவுண்டர் செய்வார்கள் என அஞ்சுகிறேன்.. இறப்புக்கு முன் ரவுடி விஷ்வா எழுதிய கடிதம்..!

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (12:21 IST)
ஸ்ரீபெரும்புதூர் ரவுடி விஷ்வா நேற்று என்கவுண்டர் செய்து சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் என்னை என்கவுண்டர் செய்வார்கள் என்று அஞ்சுகிறேன் என்று கடிதம் எழுதி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று ஸ்ரீபெரும்புதூர் ரவுடி விஷ்வா காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் இது குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா இறப்பதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளார். 
 
அந்த கடிதத்தில்  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி என்னிடம் கையெழுத்து வாங்க வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்  என்னை போலி என்கவுண்டர் செய்து சுட்டுக் கொல்லும்படி பேசினார்கள் என்றும் எனவே என்கவுண்டரில் சுட திட்டமிட்டுள்ளதாக அஞ்சுகிறேன் என்றும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும்  உதவி ஆய்வாளரே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். 
 
இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments