சோதனையை தொடர்ந்து நடத்துங்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (18:23 IST)
திமுக மீதான வருமான வரி சோதனையை தொடர்ந்து நடத்துங்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
 
இன்று காலை முதல் திமுக பிரமுகர்கள் பலரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் கடந்த 12 மணி நேரமாக சோதனை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவை என்னென்ன என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை
 
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள் என்றும் அப்போது தான் திமுக இன்னும் வலுப்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள் என ஸ்டாலின் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தொகுதி இடைத்தேர்தல்!.. குழப்பத்தில் அதிமுக!. ஸ்கெட்ச் போடும் திமுக!....

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments