Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. பயணிகள் அதிர்ச்சி..!

Siva
திங்கள், 5 பிப்ரவரி 2024 (08:26 IST)
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் சென்னை - நெல்லை பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் 9 பெட்டிகள் சேதம் அடைந்ததாகவும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப்பெரிய ஆதரவை பயணிகள் தந்து கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது வந்தே பாரத் ரயில்கள் மீது  கல் வீசும் சம்பவம் நடந்து வருகிறது

இந்த நிலையில்  சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு கிளம்பிய வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் 9 பெட்டிகளில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் மீது கற்கள் வீசப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய மர்ம நபர்களை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments