Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. போலீசார் விசாரணை!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (12:19 IST)
கடந்த 4 நாட்களுக்கு முன்னாள் பிரதமர் மோடி தொடங்கி வைத்த  வந்தே பாரத் ரயில் மீது மர்மநபர்கள் கல்வீசியதையடுத்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
பிரதமர் மோடி கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுராவில் இருந்து நியூ ஜல்பைகுறி என்ற பகுதிக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். 
 
இந்த நிலையில் இன்று காலை வந்தே பாரத் சென்று கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் ரயில் மீது கல் எறிந்தனர். இதனால் வந்தே பாரத் ரயிலில் உள்ள கண்ணாடி பெட்டி சேதமடைந்ததாகவும், இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ரயில் நிறுத்தப்பட்டு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் மீது கல்லெறிந்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல் எறிந்ததால் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments