Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் மாணவர்கள் திடீர் போராட்டம். அதிர்ச்சியில் காவல்துறை

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (22:20 IST)
இம்மாதம் 12ஆம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த தொகுதி முழுவதிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாதவாறு  பாதுகாக்கப்பட்டு வருகிறது.



 


இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி காவல் நிலையம் அருகே திடீரென மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் பாதுகாப்பையும் மீறி அந்த பகுதியில் மாணவர்கள் எப்படி கூடினார்கள் என்பது காவல்துறையினர்களுக்கே புரியாத புதிராக உள்ளது.

டெல்லியில் கடந்த 20 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருவதாகவும், விவசாயிகளுக்கு நியாயம், நீதி கிடைக்காவிட்டால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அவர்கள் கோஷமிட்டனர்.

இதனை சற்றும் எதிர்பாராத காவல்துறை அதிகாரிகள், அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக் கூடாது என்று எச்சரித்து மாணவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments