Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேப் டாப் கொடுக்காததால் மாணவிகள் முற்றுகை – செங்கோட்டையன் திமிர் பதில் !

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (15:54 IST)
கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை மாணவிகள் முற்றுகை இட்டனர்.

கோவையில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் செங்கோட்டையன் வந்திருந்தார். அப்போது 2017 ஆம் ஆண்டு படித்த மாணவிகள் சிலர் அங்கு வந்து அமைச்சர் செங்கோட்டையனை முற்றுகையிட்டு தங்களுக்கு இரண்டு ஆண்டுகளாக இன்னமும் லேப்டாப் கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.

மாணவிகளால் முற்றுகையிடப்பட்ட செங்கோட்டையன் ‘ உங்கள் குறைகளைக் கேட்டு நான் நடவடிக்கை எடுக்கிறேன். நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு நல்லது. அப்படி கேட்கவில்லை என்றால் நாங்க பாட்டுக்கு போய்ட்டெ இருப்போம். உங்களுக்கு நல்லது நடக்கணுமா வேணாமா..?’ என மாணவிகளை மிரட்டும் தோரனையில் பேசினார். பின்னர் இன்னும் இரண்டு மாதத்தில் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுப்பதாக சொல்லி சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments