Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தங்க பதக்கத்தை திருப்பி கொடுத்த மாரியப்பன்!

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (12:36 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். பீட்டாவை தடை செய்ய வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள்  பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 
ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி,  தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உலகை உலுக்கும் வரலாற்றுப் புரட்சிகளில் தமிழகத்து மாணவர்கள், இளைஞர்களின் அறவழி போராடி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரவே முடியாது என  ஏமாற்றிய அரசாங்கங்களை அடிபணிய வைத்திருக்கிறார்கள்.
 
ரத்தம் சிந்தாமல் அகிம்சை முறைய்ல் சரித்திரம் படைத்து கொண்டிருக்கும் தமிழக இளைஞர்கள். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு  புரட்சிக்கு ஆதரவாக மாற்றுத் திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன்  தம்முடைய பதக்கத்தை திருப்பித் தருவதாக அறிவித்து நெகிழ வைத்திருக்கிறார். 
 
ஜல்லிக்கட்டு புரட்சியில் தம்மை இணைத்துக் கொள்ளும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக்கில் தங்கப்  பதக்கம் வென்ற மாரியப்பன், அதனை திருப்பி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments