Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்முடி மேல்முறையீடு மனு விசாரணை எப்போது? உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Mahendran
புதன், 17 ஜனவரி 2024 (10:23 IST)
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு எப்போது விசாரணை என்பது குறித்த முக்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 
 
சொத்து குவிப்பு வழக்கில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான வழக்கை ரத்து செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கின் விசாரணையின் முடிவடைந்து தீர்ப்பு வெளியான நிலையில் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
 
இந்த தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் பொன்முடி  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில்  இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  
 
எனவே இம்மாத இறுதியில் பொன்முடி மற்றும் விசாலாட்சி மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments