Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளன் விவகாரம்; ஆளுனரை கண்டித்து விளக்கம் சொன்ன உச்சநீதிமன்றம்!

Webdunia
புதன், 18 மே 2022 (12:37 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஆளுனர் இதில் முடிவெடுக்காதது குறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்போது பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது ஆளுனர் நடவடிக்கை குறித்து பேசிய நீதிபதிகள் “தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பப்பட்டால் அதற்கு ஒப்புதல் அளிப்பதுதான் அவரது பணியே தவிர, தன் தனிப்பட்ட கருத்துகளின் பேரில் முடிவெடுப்பதல்ல” என்று கூறியுள்ளனர்.

மேலும் “தமிழ்நாடு அமைச்சரவை முடிவு ஆளுனரின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும். 161வது சட்டப்பிரிவு மாநில அமைச்சரவைக்கும் இருக்கும் அதிகாரமாகும். ஜனாதிபதிக்கோ, ஆளுனருக்கோ மட்டுமே இருக்கும் அதிகாரம் அல்ல” என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments