Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலாதேவி விவகாரம்: உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (13:41 IST)
நிர்மலாதேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமின் மனு குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி  மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை  நிர்மலா தேவி,  துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி  மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக விசாரிக்கப்பட்டு  வருகின்றனர்.
 
இந்நிலையில் கருப்பசாமியின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. கருப்பசாமியின் தரப்பிலிருந்து இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு குறித்து இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கருப்பசாமியின் ஜாமின் மனு குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் நிர்மலாதேவி தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும்படி நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்