Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரியாக ஒரே வாரத்தில் தேன்மொழியை நிரந்தரமாக பிரிந்த சுரேந்தர்

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (19:53 IST)
கடந்த வெள்ளியன்று சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தேன்மொழி என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்த சுரேந்தர் என்பவர் வாக்குவாதம் செய்து, வாக்குவாதம் முற்றியதில் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு தேன்மொழியை தாக்கினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அதுமட்டுமின்றி தேன்மொழியை தாக்கியவுடன் சுரேந்தர் அந்த வழியாக வந்த ரயிலின் முன் குதித்ததால் படுகாயம் அடைந்து மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்
 
இந்த நிலையில் அரிவாள் காயம் அடைந்த தேன்மொழி மெல்ல மெல்ல குணாமாகி வரும் நிலையில் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சுரேந்தர் இன்று மாலை மரணம் அடைந்தார். ஒருதலையாக காதலித்தாலும் தனக்கு எப்படியும் தேன்மொழி கிடைப்பார் என்ற காதல் நம்பிக்கையுடன் இருந்த சுரேந்தர், சரியாக ஒரே வாரத்தில் அவரை விட்டு நிரந்தரமாக பிரிந்துவிட்டார்
 
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்து வரும் எழும்பூர் போலீசார், சுரேந்தரின் உடல் பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேன்மொழியை தாக்கிய குற்றவாளியே மரணம் அடைந்துவிட்டதால் இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிடும் என கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments