Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தைப்பூச திருவிழா! திருச்செந்தூரில் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதி உலா!

Prasanth Karthick
புதன், 24 ஜனவரி 2024 (08:59 IST)
நாளை முருகபெருமானுக்கு உகந்த தைப்பூச திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றே திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.



முருகபெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாளை தைப்பூச திருவிழா நடைபெறும் நிலையில் அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு அஸ்திரதேவர் தீர்த்தவாரி நிகழ்வும், 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

பின்னர் அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி தங்கமயில் வாகனத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தைப்பூசத்திற்கு பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன் தயாரிப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments