Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றமா? சோனியா காந்தி எச்சரிக்கை

Webdunia
சனி, 14 அக்டோபர் 2023 (16:30 IST)
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என இன்றைய காங்கிரஸ் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு   நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்காகாந்தி, மெகாமுப்தி உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர்.

திமுக முன்னாள் தலைவர் கலைஞரின்  நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், இன்று திமுக மகளிர் மாநாடு சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ்  கட்சியின் ஆலோசனைக் கூட்டமும்  சென்னையில் நடைபெற்றது.

இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது, தமிழகத்தில் காலியாக உள்ள கட்சி சார்ந்த நிர்வாகிகளின் இடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் தற்போதைய தலைவர் கே.எஸ். அழகிரி மாற்றப்படலாம் என கேள்வி எழுப்பட்டு வருகிறது.

இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சோனியா காந்தி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments