Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

Mahendran
சனி, 3 மே 2025 (15:00 IST)
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதென்று வெளியாகியிருந்த செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
 
இந்த அறிவிப்பு தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், "நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், "சொத்து வரி 6% உயர்த்தப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது" எனத் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு எந்தவிதமான சொத்து வரி உயர்வு ஏற்பட்டதில்லை என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
 
இதன் அடிப்படையில், "எந்தவித அறிவிப்பும் இல்லாமல் சொத்து வரி உயர்வு என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது" என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
இந்த மறுப்பு விளக்கத்திற்கு பிறகு, சொத்து வரி உயர்வு தொடர்பாக பரவிய செய்தி திருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

இறக்குமதிக்கு தடை.. கப்பலும் வரக்கூடாது. பாகிஸ்தானுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா..!

விஜயபிரபாகரனுக்கு என்னுடைய பதவியா? தேமுதிகவில் இருந்து விலகும் பிரபலம்..!

மோடி, அமித்ஷா எனக்கு தற்கொலை வெடிகுண்டு கொடுத்தால் பாகிஸ்தானை அழிக்கிறேன்: அமைச்சர் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments