Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வென்றவுடன் தந்தையை இழந்த தமிழக வீராங்கனை!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (11:46 IST)
தங்கம் வென்றவுடன் தந்தையை இழந்த தமிழக வீராங்கனை!
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஒரு சில நிமிடங்களில் தமிழக வீராங்கனை தனது தந்தையை இழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நியூசிலாந்து நாட்டில் தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை லோகப்பிரியா கலந்து கொண்டுள்ளார் 
 
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என அவருக்கு அவருடைய தந்தை வாழ்த்து கூறி மெசேஜ் அனுப்பினார். இதனை அடுத்து லோகப்பிரியா பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சில நிமிடங்களில் இந்த மகிழ்ச்சியான செய்தியை தந்தையுடன் பகிர்வதற்காக போன் செய்தபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

 
தங்கம் வாங்க வேண்டும் எனக் கூறி அனுப்பி வைத்த தந்தை வெற்றி பெற்றதை கூட பார்க்க முடியாமல் போய் விட்டார் என வீராங்கனை லோகப்பிரியா கதறி அழுதது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments