Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (13:51 IST)
நாளை முதல் 4 நாட்களுக்கு புதுச்சேரி, தமிழ்நாடு, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 

 
வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் நாளை முதல் 4 நாட்களுக்கு புதுச்சேரி, தமிழ்நாடு, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
ஜூன் 13 ஆம் தேதி தென் மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவில் பலத்த சூறாவளி வீசும். இன்று தென்மேற்கு, மத்திய கிழக்கு, மராட்டியம், கோவா கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தென் மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், மராட்டியம், கோவா, கேரளாவில் பலத்த சூறாவளி வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணைய தளத்தில் பார்க்கலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments