Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்: முழு விபரங்கள்..!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (12:34 IST)
ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாட இருப்பதை அடுத்து சிறப்பு ரயில்களை இயக்க தென்னிந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து தென்னிந்தியா ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
 
தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இயக்கப்படும் ரயில்களின் விபரங்கள்:
 
திருவனந்தபுரம்-சென்னை எழும்பூர் இடையிலான சிறப்பு ரயில் (எண்: 06044), வரும் 5, 12-ம் தேதிகளில், திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் சென்றடையும். 
 
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து வரும் 6, 13-ம் தேதிகளில் மதியம் 2.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06043), மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
 
எர்ணாகுளம்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06046), வரும் 9, 16-ம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.05 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து வரும் 10, 17-ம் தேதிகளில் பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06045), மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
 
இவ்வாறு தென்னிந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments