Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசரப்பட்டுட்டீங்களே தமிழிசை! – கிண்டலுக்குள்ளான தமிழிசை பேட்டி

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (09:48 IST)
வேலூர் மக்களவை தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே அ.தி.மு.க வெற்றிப்பெற்றதாக தமிழிசை சௌந்தர்ராஜன் அளித்த பேட்டி அவரை கிண்டலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.

கடந்த 5ம் தேதி நடைபெற்ற வேலூர் மக்களவை தொகுதி தேர்தலின் வாக்கு எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. முதல் 6 சுற்று வாக்கு எண்ணிக்கைகளில் அ.தி.மு.க முன்னிலையில் இருந்தது. ஆனால் பிற்பகலுக்கு பிறகு தி.மு.கவின் கை ஓங்க தொடங்கியது. இறுதியாக 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்.

காலை அதி.மு.க முன்னிலையில் இருப்பதை கண்டு பலர் அ.தி.மு.கதான் வெற்றிபெறும் என நம்பினார்கள். முற்பகல் வேளையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சௌந்தர்ராஜன் “அ.தி.மு.கவின் இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்ததுதான். இந்த வெற்றிக்காக அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் இணைந்து உழைத்துள்ளனர். இந்த வெற்றி வரப்போகிற சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும்” என பேட்டியளித்தார்.

வெற்றி பெறுவதற்கு முன்னாலேயே அவசரப்பட்டு தமிழிசை அளித்த இந்த பேட்டியை பலரும் கிண்டல் செய்துள்ளனர். இதுகுறித்து ஒன்றும் சொல்லமுடியாத பாஜக தொண்டர்கள் முடிவு வரும் வரை கொஞ்சம் காத்திருந்திருக்கலாமே என மனம் வருத்தம் கொள்வதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments