Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்து விவகாரத்தில் ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? தமிழிசை கேள்வி

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (13:21 IST)
எல்லா விஷயங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் ஸ்டாலின் வைரமுத்து விவகாரத்திற்கு மட்டும் ஏன் இன்னும் எந்த கருத்தையும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மீடூவில் பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். வைரமுத்து மட்டுமல்லாமல் அவர் பல முக்கிய பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இதற்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சிப் பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனை வழங்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.
 
தமிழகத்தில் நடைபெறும் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் குரல் கொடுக்கும் ஸ்டாலின் வைரமுத்து விவகாரத்தில் எந்த கருத்தையும் கூறாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது ஏன்? வைரமுத்து திமுகவிற்கு வேண்டியவர் என்பதாலயா? என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்