Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
நெல்லை கிழக்கும் மாவட்ட பாஜக சார்பில் வார்டு பொறுப்பாளர்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கலந்துக்கொண்டார். அப்போது அவர் பின்வருமாறு பேசினார்...
நாடு முழுவதும் 22 மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. கருப்பு பண முடக்கம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி உள்ளிட்ட பணிகளால் பாஜவுக்கு பின்னடைவு இல்லை. இதைதான் மூன்று மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
பாஜக மீது இதுவரை எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இதுவே பாஜகவின் முக்கிய பலமாகும். தமிழத்தில் தற்போது அரசியல் வெற்றிடம் நிலவுகிறது. இந்த வெற்றிடத்தை பாஜகவை தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது.
தமிழதத்தில் மாற்றத்தை கொண்டு வருவது பாஜகவால் மட்டுமே முடியும் என நிகழ்ச்சியில் பேசினார். சமீபத்தில் ரஜினிகாந்த தமிழகத்திற்கு நல்ல தலைவர் தேவை, தமிழக அரசியலி வெற்றிடம் உள்ளது அதை நிரப்புவதற்கே நான் அறசியலுக்கு வருகிறேன் என தெரிவித்திருந்தார்.
இதனால், நெட்டிசன்கள் தமிழிசை மிக அழகாக வசனங்களை அள்ளிவிடுகிறார் என கலாத்து வருகின்றனர்.