Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் மொழியைக் கற்றுவருகிறேன்… தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (10:09 IST)
தமிழக ஆளுநர் ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகம் என்று பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜனவரி 4ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாச்சார தொடர்பை கொண்டாடும் விழாவில் காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே தொடர்பை குறிப்பிடவே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் என்றும் அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு என்பது இல்லை என்பதால் தமிழகம் என்ற வார்த்தையை நிகழ்ச்சிக்காக பயன்படுத்தினேன் என்றும் கூறினார்.

எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்வதோ தவறானது என்றும் எதார்த்தத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையடுத்து தற்போது ஆளுநர் மாளிகையில்  பயிற்சியில் உள்ள இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் 44 பேரிடம் உரையாற்றிய போது “தமிழ்நாட்டில் பணியாற்றியது மூலம் நான் பல விஷயங்களை தெரிந்துகொண்டேன். தொடர்ந்து தமிழ் மொழியைக் கற்று வருகிறேன்” எனப் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது ஓய்வு நாளில் நீதிபதி குற்றச்சாட்டு

மத்திய அரசு நிதி வழங்கவில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த தமிழக அரசு..!

நேற்று அதிர்ச்சி கொடுத்த பங்குச்சந்தை, இன்று மீண்டும் ஏற்றம்.. சென்செக்ஸ் நிலவரம் என்ன?

இறங்குவது போல் சென்ற தங்கம் மீண்டும் உச்சம்.. இன்று ஒரே நாளில் ரூ.1760 உயர்வு..!

இந்தி தெரியாது போடா என இனி கூற வேண்டிய அவசியம் இல்லை: மொழி பெயர்த்து தருகிறது கூகுள்

அடுத்த கட்டுரையில்
Show comments