Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில கல்விக்கொள்கையில் என்னவெல்லாம் இருக்கணும்..? – கருத்துகளை தெரிவிக்க..!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (08:57 IST)
தமிழ்நாடு அரசு உருவாக்கி வரும் மாநிலக் கல்விக்கொள்கை குறித்த கருத்துகள், ஆலோசனைகளை அனைவரும் வழங்கிட இமெயில் மற்றும் முகவரியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநிலங்களில் அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு தனக்கென மாநில கல்விக்கொள்கை திட்டத்தை வகுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்த சிறப்புக்குழு கல்விக்கொள்கை குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிய உள்ளனர். இதற்காக தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து அனைத்து பகுதி மக்களிடமும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் மூலம் பொதுமக்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பலரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது.

இதுதவிர பொதுமக்கள் அரசின் stateeducationpolicy@gmail.com என்ற இமெயில் முகவரி மூலமாகவும், சென்டர் பார் எக்செல்லன்ஸ் கட்டிடம், 3-வது தளம், களஞ்சியம் கட்டிடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600025 என்ற அஞ்சல் முகவரிக்கு கடிதம் மூலமாகவும் தங்கள் கருத்துகள், ஆலோசனைகளை செப்டம்பர் 15ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments