Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் திட்டம்! – தமிழக அரசு ஏற்பாடு!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (15:39 IST)
தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் உணவு பொருட்களை வழங்க உணவு பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்க ஸ்மார்ட் ரேசன் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. தவிரவும் வாங்கும் பொருட்கள் குறித்த விவரங்கள் பயனாளர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். இந்நிலையில் உணவு பொருள் வழங்கலை மேலும் மேம்படுத்த பயோமெட்ரிக் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இதை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பயோமெட்ரிக் முறை நடைமுறைக்கு வந்த பிறகு ஸ்மார்ட் கார்டு வைத்திருக்கும் அட்டைதாரர் கைரேகை வைத்து பயோ மெட்ரிக்கில் பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும். கைரேகை பதிவு வேலை செய்யாவிட்டால் பயனாளர் செல்போனுக்கு ஒடிபி எண் அனுப்பப்படும். அதை பதிவு செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments