Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிமாநில தொழிலாளர்களின் பயண செலவை நாங்களே ஏற்கிறோம் – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
சனி, 9 மே 2020 (11:41 IST)
தமிழகத்தில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான செலவை தமிழக அரசே ஏற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத சூழலில் தவித்து வந்தனர். இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவது குறித்து சம்பந்தபட்ட மாநில அரசுகள் முடிவெடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஒருவேளை சம்பந்தபட்ட மாநிலங்கள் தொழிலாளர்களுக்கு பயணம் செய்வதற்கான செலவை செய்ய மறுக்கும்பட்சத்தில் அவர்களுக்கான பயண செலவை தமிழக அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments